Nov 20, 2012

இஸ்ரேலுக்கு எதிராக பொங்கும் அரபு மக்கள்!

பயங்கரவாத இஸ்ரேலின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி பச்சிளம் குழந்தை முதல் வயது போன முதியவர்கள் வரை சுமார் 150 உயிர்களை கொலை செய்து, 1000க்கும் மேற்பட்ட மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவதியுறுவதை கண்டு பொறுக்க முடியாமல் அரபு தேசத்து மக்கள் வேதனைப்படுகின்றனர்.

நேற்று (19.11.2012) ஜோர்தான் சென்ற அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாஹ் பின் ஜைத் அல் நஃஹான், இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாக தமது கண்டனத்தை பதிவு செய்தார்.
இஸ்ரேல் கொடியினை எரிக்கும் பஹ்ரைன் பாராளுமன்ற உறுப்பினர் உஸாமா தமிமீ.

பஹ்ரைனில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஆத்திரம் தாளாமல் இஸ்ரேல் கொடியினை பாராளுமன்ற உறுப்பினர் உஸாமா தமிமீ எரித்தார்.

கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் ஹமது பின் ஜாஸிம் அல் தானி கத்தார் சார்பாக தமது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தார்.

நேற்றை தினம் ஸவுதி பாராளுமன்றம் இஸ்ரேலின் அழிச்சாட்டியம் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு ஐநா உடனடி நடவடிக்கையினை மேற் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானத்தினை கொண்டு வந்தது.

No comments: