Oct 24, 2012

மதுக்கூரில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை!


இதஜ சார்பாக சென்னை ராயப்பேட்டையில் பெருநாள் தொழுகை!


முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புக்குரியவர்களே!

நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.intjonline.in சில Technical கோளாறு காரணமாக தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது. அது இன்ஷா அல்லாஹ் விரைவில் சரி செய்யப்படும். அதுவரை நம் செய்திகளை கீழ்காணும் http://intjindia.blogspot.com/ என்ற வலைப்பூவில் காணலாம்.
இவண்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
தலைமையகம்.
 

இதஜ மயிலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்!


40 ஏழை குடும்பளுக்கு இதஜ சார்பில் மளிகைப் பொருள்கள்!

 

நாளை (25.10.2012) அரஃபா தினம்!


மியான்மரில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம்!

மேற்கு மியான்மர் மாநிலமான, ராகேனில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் "மாமர" மற்றும் "மரோத்" ஆகிய இரு ஊர்களில் உள்ள அனைத்து வீடுகளையும் புத்த தீவிரவாதிகள் "தீ" வைத்து கொளுத்தினர். இதில், முன்னூறு வீடுகள் எரிந்து சாம்பலானது.

Oct 23, 2012

சென்னையில் இதஜ சார்பில் பெருநாள் தொழுகை!

இன்ஷா அல்லாஹ் வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் ஆஸாத் நகர் சமூக நல கூடத்தில் பெருநாள் தொழுகை சகோதரர் ஆலிம் புகாரி அவர்களால் நடத்தப்பட இருக்கிறது.



அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவண்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
தென் சென்னை மாவட்டம்.

Oct 22, 2012

சகோதரர் பிஜெக்காக பிரார்த்திக்கும்படி இதஜ வேண்டுகோள்!


கடந்த 13/10/2012 அன்று வின் தொலைக்காட்சியில் நடைபெற்ற உலக பார்வை நிகழ்ச்சியில்

Oct 19, 2012

வாழ்வை சிறக்க வைக்கும் வாழைப்பூ!

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

தற்பெருமை குறித்து இஸ்லாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''தமது ஆடை அழகாக இருக்க வேண்டும், தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமா?'' என்று அப்போது ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ் அழகானவன் அழதையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி­),   நூல்: முஸ்லி­ம் 147.

திருவல்லிக்கேணி INTJ மரகசில் இஸ்லாத்தை ஏற்ற வெங்கடாசலம்!




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சத்தியத்தை உணர்ந்து இஸ்லாத்தை தங்கள் மார்க்கமாக ஏற்று கொள்வ்ரின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.

இதஜ நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இஸ்லாத்தை ஏற்றனர்!


 தனது தனித்துவமான் தஃவா மூலம்  அல்லாஹ்வின் பாதையில் மக்களை அழைத்து நல்லறம் செய்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நேதாஜி நகர் கிளையில் கடந்த வாரம் நடந்த வாரந்திர பெண்கள் பயானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  மூவர் இஸ்லாத்தை ஏற்றனர். அல்ஹம்து லில்லாஹ்.

வளைகுடா நாடுகளில் 26.10.2012 அன்று ஈதுல் அழ்ஹா பெருநாள்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தியாக செம்மல் இபுறாஹீம் (அலை) அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் ஹஜ் பெருநாள் எனும் ஈதுல் அதுஹா இன்ஷா அல்லாஹ் வரும் 26.10.2012 (துல் ஹஜ் பிறை 10) அன்று வளைகுடா நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

அதற்கு முந்தைய நாளான பிறை 9 (25.10.2012) வியாழன் அன்று அரஃபா தினமாகும். ஹஜ்ஜூக்கு சென்றவர்கள் தவிர்த்து மற்றவர்கள் அன்று நோன்பு நோற்க வேண்டும்.

-ஆதம் ஆரிஃபின்

வக்பு வாரிய சொத்துக்கள் மீட்பு!

இதில், 90% சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. வேதனை என்னவென்றால், இந்த சொத்துக்களை மீட்பதற்காக ஆங்காங்கே உள்ள "உள்ளூர் மக்கள்" முயற்ச்சித்தாலும் -ஆக்கிரமிப்பாளர்களே அசைந்து கொடுக்க முற்பட்டாலும், "வக்ப் வாரியத்தில் வேலை பார்க்கும் ஊழலின் ஊற்றுக்கண்களாக செயல்படும் அதிகாரிகள்" பெரும் தொகையை "கையூட்டு" பெற்றுக்கொண்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக, நேரடியாகவே களத்தில் இறங்கி, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு சட்டரீதியான (குறுக்கு வழிகள் குறித்த) ஆலோசனைகளை வழங்கி, அவர்களுக்கு உறுதுணையாக செயல்படுவர்.

அரவணிகளுக்கு இஸ்லாத்தை எத்தி வைத்த இதஜ!


தவறான பழக்கவழக்கங்களால் தடம்மாறிப் போய் பலராலும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு கடைகடையாக கையேந்தி வந்த அரவாணிகளிடம் அழைப்புப் பணி செய்தார் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முனீர். 
 
 
 

Oct 17, 2012

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி.

இறுதித்தூதரை இழிவாகப் பேசிய இந்து முன்ணனியினரை கைது செய்ய இதஜ கோரிக்கை!


புளியந்தோப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் நபிகளாரை இழிவாகப் பேசிய இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு தினங்களாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராடிக் கொண்டுள்ளன. இதனால் போலிஸ் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிகக் இந்து முன்னணியினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு கமிசனர் அலுவலகம் முற்றுகை இட முயன்றனர்.

Oct 15, 2012

டெங்கு காய்ச்சல் குறித்து இதஜ தஞ்சை மாவட்டத்தின் விழிப்புணர்வு நோட்டீஸ்!

இன்று மக்களிடையே அதிக பாதிப்பு உள்ளாகி உயிர் இழக்கும் மோசமான நோய்களில் ஒன்றான டெங்கு காய்ச்சல் குறித்து, விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு மார்க்கப் பணியாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை வடக்கு கிளையின் விழிப்புணர்வு நோட்டீஸ்.


செங்குன்றத்தில் சிறப்புற நடந்த INTJ வின் அமைதிக்கு அழைக்கிறது இஸ்லாம்" நிகழ்ச்சி!

 
அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால், செங்குன்றம் முழுக்க பேனர்கள், போஸ்டர்கள் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டு, மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு தரப்பட்டு, பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக, செங்குன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "அமைதிக்கு அழைக்கிறது இஸ்லாம்" நிகழ்ச்சி மிகச் சிறப்பாக  நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
 
 

ராயப்பேட்டையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் இதயம் கவர் மருத்துவமனை தஃவா !

 ஞாயிற்று கிழமைகளில் அரசு மருத்துவமனைகளில் அல்லலுற்று படுத்திருக்கும் ஏழை நோயாளிகளை சந்தித்து , நபி ஸல் அவர்களின் சுன்னத்தான வழிமுறைப்படி அவர்களுக்காக 'லா பஹ்ஷ தஹஹருன் இன்ஷா அல்லாஹ்' என அவர்களுக்காக பிரார்த்தனை செய்து, ஆறுதலாய் தலை வருடி, அல்லாஹ் என்றால் யார்? இஸ்லாம் என்றல் என்ன? என்பதை எடுத்து சொல்வதோடு , தாவா சம்பந்தமான கையேடுகளையும் வழங்கி , ஏழைகளுக்கு உணவளிக்க தூண்டும் இஸ்லாத்தின் மனித நேயத்தை எடுத்துரைக்கும் விதமாக பழங்கள் பிஸ்கட்டுகள் வழங்கி அழைப்பு பணி செய்வது ஐ.என்.டி.ஜே.வின் தாவாக்குழுவின் வழக்கமாகும்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மைலாப்பூர் கிளை உதயம்!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியத்தில் உறுதி சமூகத்தில் நல்லிணக்கம் மாமறைக் குரானை மக்களிடம் சேர்ப்போம், அரசு மருத்துவமனைகளில் அழைப்புப்பணி போன்ற பல்வேறு பணிகளின் மூலம் கவரப்பட்டு கொள்கை சகோதரர்கள் தங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
 

Oct 14, 2012

விண்டிவியில் நம் நிகழ்ச்சியினை காண........

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தினமும் நம் அமைப்பின் சார்பாக நடைபெறும் இஸ்லாமிய நிகழ்ச்சி விண்டிவியில் காலை 9 மணியளவிலும் இரவு 12 மணியளவிலும் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

நிகழ்ச்சியினை காண இங்கே கிளிக் செய்யவும்.

Oct 11, 2012

அமைதிக்கு அழைக்கிறது.......இஸ்லாம்

சென்னை செங்குன்றத்தில் வரும் ஞாயிறு (14.10.2012) அன்று சக்கரப்பாணி திருமண மண்டபத்தில் அமைதிக்கு அழைக்கிறது.......இஸ்லாம்!

அழைக்கிறது..........
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
செங்குன்றம் நகர் கிளை, திருவள்ளுர் மாவட்டம்.
சென்னை.

துஆ செய்யவும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை நிர்வாகி சகோதரர் கமால் அவர்களின் தாயார் அவர்கள் இன்று (11.10.2012) காலை வஃபாத் ஆகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அவர்களின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யவும்.

-திப்பு சுல்தான்.

Oct 10, 2012

பிஜெ அவர்களின் உடல் நலத்திற்காக துஆ செய்யவும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


இவண்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
தலைமையகம்.

தென் சென்னை மாவட்ட இதஜ செயல் வீரர்கள் கூட்டம்!

தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று [7.10.12] காலை சூளைமேடு அல் ஃபுர்கான் மதரஸாவில் நடை பெற்றது.



Oct 9, 2012

காஞ்சி மாவட்டப் பொதுக்குழு



இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்ட பொதுக்குழு கடந்த 30/09/2012 ஞாயிறு அன்று குன்றத்தூர் பெரியார் நகரில் இறையருளால் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.