Nov 16, 2012

கோவையில் அமைதிக்குழு கூட்டம்! இதஜ பங்கேற்பு!

கோவையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. 
கோவையில் சில நாட்களாக சில விரும்பதாக சம்பவம் நடந்து வந்தது. அதனால் பதட்டம் நிலவியது. இதை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் கருணகரன்,  உடனே தமிழக அரசின் அமைதிக்குழு கூட்டத்தை கூட்ட உத்தரவுயிட்டார்.

ஆட்சியரின் உத்தரவு ஏற்று, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் இஸ்லாமிய இயக்க அமைப்புகளுக்கு இன்று (15-11-2012) வியாழன் மாலை 3 மணியளவில் ஆட்சித்தலைவர் ஆட்சிமன்ற கூடத்தில் அமைதிக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது என்ற தகவல் அனைத்து அமைப்புக்கும். கிராம அதிகாரிகள் முலம் தகவல் கொடுக்கப்பட்டது. 

அதன்படி, இயக்க தலைவர்கள் அனைவரும் மாலை 3:30 மணியளவில் கூடினார்கள். பிறகு அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது.  இதில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் , தமுமுக, ம.ம.க, பிஃஎப்ஐ, எஸ்டிபிஐ, டின்டிஜே, ஐஎன்டிஜே, முஸ்லிம் லீக்,எசிடிஎம்,ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் போன்ற அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

அவர்கள், தாங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள். அதுபோல் அரசு அதிகார்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலந்துகெண்டார்கள்.

-முஹம்மது ஸபீர்.

No comments: