Nov 5, 2012

முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய இதஜ தமிழக அரசுக்கு கோரிக்கை!

திருப்புரில் நேற்று (04.10.12) இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் நிகழ்சிக்காக கலந்து கொள்ள வந்த அதன் தலைவவர்கள் எஸ்.எம்.பாக்கர்,  முஹம்மது முனீர், கோவை ஜஅஃபர் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது வரும் சட்ட சபை வைர விழாவின் போது பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் உள்பட அனைத்து சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் இல்லை எனில் இந்த பிரச்சனையை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 30 முதல் 'நீதி கேட்டு நெடும் பயணம்' எனும் போராட்ட வடிவின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று மக்கள் மன்றத்தில் போராடும் எனக் கூறினார். இச்சந்திப்பின் போது மாவட்ட தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments: